Lyrics
நீதியின் தேவனே வரவேண்டும்
நிம்மதி என் வாழ்வில் தரவேண்டும்
ஏழைகள் ஆற்றலே நீயன்றோ
அவர்தம் வீழ்ச்சியுன் தோல்வியன்றோ
உறங்காமல் ஓயாமல் உழைக்கின்றோம்
உலகை எம் வியர்வையால் நனைக்கின்றோம்
விளைகின்ற பொருளில் எமக்குரிமையில்லை
விம்முகின்ற குரல்களுக்கு முடிவுமில்லை
எம் தெய்வமே இறைவா
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
முடிவுண்டோ வாழ்வுண்டோ
இலஞ்சத்தால் வாழ்வை விலைபேசிடுவார்
பஞ்சமென்னும் சங்கிலியால் பூட்டிடுவார்
தேவையான பொருளை விலை ஏற்றிடுவார்
ஏழை எங்கள் அழுகையிலே மகிழ்ந்திடுவார்
எம் தெய்வமே இறைவா
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
முடிவுண்டோ வாழ்வுண்டோ
Details
- Numeric ID
- 4094
- Song ID
- neethiyin-deivanae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0