Lyrics
நீதியின் வலக்கரத்தாலே
என்னை நித்தமும் வழி நடத்தும் -2
என் வாழ்வினை என் ஜீவனை (2)
உம் கைகளில் படைக்கிறேன்
இந்த வேளையில் (உ)
மாய உலகினிலே நான்
மயங்கித் திரிகையிலே (2)
நல்ல பாதை காட்டி எந்தன் பாவம் நீக்கி
உந்தன் மகிமையை காணச் செய்தீர் (2)
2 உந்தன் வருகையிலே நான்
உம்முடன் சேர்ந்திடவே
நல்ல ஆவி தந்து உந்தன் கிருபை ஈந்து
என்னை ஆயத்தப்படுத்திடுமே
3.வானின் மகிமையிலே நான்
என்றும் நிலைபெறவே
உம் வார்த்தையாலே
எந்தன் வாழ்வை மாற்றி
நித்ய ஜீவனைக் காணச் செய்யும்
Details
- Numeric ID
- 2001
- Song ID
- neethiyin-valakkarathaal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0