Neethiyin Valakkarathaal Nithamum நீதியின் வலக்கரத்தால் நிதமும்
நீதியின் வலக்கரத்தால் நிதமும்
Unknown
Lyrics
Lyrics
நீதியின் வலக்கரத்தால் நிதமும்
என்னை தாங்கிடுமே – நீதிபரரே
ஓங்கிய புயத்தினால் உயர்த்தி
என்னை நிறுத்திடுமே – உயர்ந்தவரே
உம்மைத்தேடி முகம் காண
மனம் நாடி விரையுதே – பலகோடி
புது பாடல் தினம் பாடி மகிழவே
1. பாவத்தோடு பயணம்
செய்து பழகி போனதால்
வேதம் சொல்லும் வழியை விட்டு
விலகிப்போனதால்
பாவக்கறை நீங்கிடவே
பரிசுத்த வசனத்தாலே கழுவி
என்னை நிறுத்திடுமே பரிசுத்தரே
2. பாவத்தின் மேல் ஜெயம் பெற
தேவா ஆவி வேண்டுமே
மாமிசத்தை ஜெயிக்க
தூய ஆவி தாருமே
ஆவியுடன் ஆத்துமா
சரீரமதை மாற்றிடவே
பரிசுத்த ஆவியாலே நிரப்பி
என்னை நடத்திடுமே உயர்ந்தவரே
3. மேகத்தோடு போனவரே நேசரேசுவே
இந்த தேகம் விட்டு உம்மை
சேர ஆவல் பெருகுதே
தாகத்துடன் காத்திருக்கும்
தாசர் மனம் ஏங்கிடுதே
பரிசுத்த உதிரத்தாலே கழுவி
என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே
Details
- Numeric ID
- 4090
- Song ID
- neethiyin-valakkarathaal-nithamum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0