Lyrics
நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்
வல்லோன் உந்தன் தஞ்சம் அன்றோ
சோர்ந்திடாதிரு நீ சோர்ந்திடாதிரு
1. நேசித்தோரெல்லாம் உன்னை
தூஷித்திரிந்தாலும் – நீ நம்பினோரெல்லாம்
நாடு வழியில் அகன்றாலும் – உந்தன்
இயேசு மாறிடார் அவர் என்றும் கைவிடார்
இன்னும் கொஞ்சம் நாள் தான் உண்டு
உந்தன் நாதன் இயேசு வருவார்
சோர்ந்திடாதிரு
2. பாலைவனமாம் உன் வாழ்வை
சோலையாகுவார் – தேவன்
தாமவர் கண்ணீர் யாவும் மாற்றுவார்
உந்தன் துன்பம் யாவும் பெருகும்
இன்பமாகுமே – மலைகள் விலகும்
பர்வதம் அகலும் – மாறா கிருபை
தாங்கும் எந்நாளும் சோர்ந்திடாதிரு
3. இம்மைக்காக நீ மன பாரம்
கொண்டிருந்தால் – மறு வாழ்வை
எங்ஙனம் உந்தன் தேவன் தந்திடுவார்
காணும் வானம் பூமியும் ஒரு நாளில் மாறிடும்
ஜீவன் தந்த ஜீவ நாதன் – வானில்
உன்னை காண வருவார் சோர்ந்திடாதிரு
Details
- Numeric ID
- 4044
- Song ID
- nenje-neeyean-sogam-kondaai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0