OHO YESUVIN NESA MATHURAMAE KEERTHANAI SONG ஓகோ யேசுவின் நேச
ஓகோ யேசுவின் நேச
Lyrics
ஓகோ யேசுவின் நேச மதுரமே,
உணர்வாயே பாவி.
ஓகோ நேசமதுயரமே நீளமோ டாழம்
வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.
மாகொடும் பாவம தாலழும் பாவியே,
ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.
பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே
நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?
சத்ரு பூலோகந் தயாபர நேசம்
வைத்த பொருளிதை மறந்திடலாமோ?
நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே
சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.
நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த
உன்னத நேசம் ஒப்புள தாமோ?
தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும்
சாவினைப் போக்கும் சற்குரு நேசம்.
இக்கணம் யேசுவையே விசுவாசி
அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய்.
Details
- Numeric ID
- 7469
- Song ID
- oho-yesuvin-nesa-mathuramae-keerthanai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0