Lyrics
ஒன்றுமில்லாதிருந்த என்னையும்
உந்தனின் சாயலில் சிருஷ்டித்தீர்
நித்யமான அன்பினால் என்னையும்
இயேசுவின் இரத்தத்தால் மீட்டீரே
உம் மகா கிருபைக்காய் உம்மை நான்
துதிப்பேன் என்றென்றும்
எந்தன் பாவங்களை போக்கவே
உலகத்தில் வந்த என் ஏசுவே.
பாடுகள் கஷ்டங்கள் ஏற்று நீர்
சிலுவையில் எனக்காய் மரித்தீர் - உம் மகா
மன்னிப்பும் புது வாழ்வும் தந்தீரே
என்னுள்ளே வந்தீரே என் ஏசுவே.
பரிசுத்த ஆவியை நீர் தந்தீரே
ஆவியின் ஆசீர்வாதங்கள் தந்தீரே - உம் மகா
உணவும் உடையும் செல்வமும்
எனக்காய் தந்தீரே என் ஏசுவே.
தீமைகள் யாவிலும் நின்றென்னை
கண்மணி போல பாதுகாத்தீரே - உம் மகா
Details
- Numeric ID
- 1066
- Song ID
- ontrumillaathiruntha-ennaiyum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0