Oru Murai Vittu Song 153 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1 ஓர் முறை விட்டு மும்முறை சீமோன் மறுத்தும் ஆண்டவர், "என்னிலே அன்புண்டோ"? என்றே உயர்த்தபின் கேட்டனர் 2 விஸ்வாசமின்றி க் கர்த்தரை பன்முறை நாமும் மறுத்தோம்; பயத்தினால் பலமுறை நம் நேசரை விட்டோம். 3 சீமோனோ சேவல் கூவுங்கால் மனம் கசந்து அழுதான்; பாறை போல் நின்று பாசத்தால் கர்த்தாவைச் சேவித்தான். 4 அவன் போல் அச்சங் கொள்ளினும், நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்; பாவத்தால் வெட்கம் அடைந்தும் கண்ணீர் சொரிந்திலோம். 5 நாங்களும் உம்மை விட்டுமே பன்முறை மறுதலித்தும், நீர் எம்மைப் பார்த்து, இயேசுவே, நெஞ்சுருகச் செய்யும். 6 இடறும் வேளை தாங்கிடும் உம்மைச் சேவிக்கும் கைகளும், உம்மை நேசிக்கும் நெஞ்சமும் அடியார்க்கருளும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5449
Song ID
or-murai-vittu
Views
0
Downloads
0