Lyrics
நான் நம்பும் என் கன்மலை நீர்தானையா
நான் தங்கும் என் உறைவிடம் நீர்தானையா
1.மகிமையின் நம்பிக்கையாய் எனக்குள்ளே நீர்
வாசம்பண்ணும் தேவன் நீர்
நான் நம்பும் இரகசியம்
பர்வதங்கள் அசைந்தாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
என் கரங்கள் உம்மையே நோக்கி இருக்கும்
மரண வாதை சூழ்ந்தாலும்
பஞ்சம் எங்கும் வந்தாலும்
நான் நம்பும் நம்பிக்கை என் இயேசு ஒருவரே
நம்பிக்கையே ஆராதனை
நம்பிக்கையே ஆராதனை
நங்கூரமே ஆராதனை
நித்தியமே ஆராதனை
நிரந்தரமே ஆராதனை
2.ஆவியின் அச்சாரமாய் எனக்குள்ளே நீர்
வாசம்பண்ணும் தேவன் நீர்
என் முழு ஆதாரம்
நம்பிக்கை இழந்தாலும்
நம்பினோர் கைவிட்டாலும்
ஆவியின் பெலத்தினாலே முன்னேறுவேன்
வழிகள் அடைக்கப்பட்டாலும்
தாமதங்கள் நேர்ந்தாலும்
நான் நம்பும் நம்பிக்கை என் இயேசு ஒருவரே
3.மிகவும் அதிகமாய்
எனக்குள்ளே நீர்
கிரியை செய்யும் தேவன் நீரே
அன்பின் பூரணம்
தலைமுறை தலைமுறையாக
சதாகாலங்களிலும்
துதியும் மகிமையும்
உமதாகட்டும்
வானத்தின் கீழே
பூமியின் மேலே
நான் நம்பும் நம்பிக்கை
என் இயேசு ஒருவரே
Details
- Numeric ID
- 478
- Song ID
- orae-nambikai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0