Lyrics
இத்தனை நாட்கள் வாழ்வில் யாரை நம்பினேன்
யாரையும் உயர்த்தும் உந்தன் தயவை நம்பினேன்
எந்த மனிதனையும் உயர்த்தும் கிருபை அல்லவா
என்னை உயர்த்துவதே உந்தன் பிரியம் அல்லவா
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா
இன்று உமக்கும் எனக்கும் இருக்கும் உறவை பிரிக்க முடியுமா
ஒரு நாளும் பிரியாமல்
என் நெஞ்சில் கரைந்தோடும்
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் அன்பு
என் இயேசுவின் அன்பு
என்னை உயர்த்திடும் அன்பு
ஆழ் மனதின் ஆழங்களில் நான் உடைந்து போனாலும்
ஏழு தரம் விழுந்தாலும் நான் மீண்டும் எழுந்திருப்பேன்
ஒரு நாளும் மனிதர்களை நான் தேடி அலைவதில்லை
உம் கரத்தை நம்பினவன் நான் என்றும் நிலைத்திருப்பேன்
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
எந்தன் மேலே வைத்த தயவை அழிக்க முடியுமா ?
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
நீர் என் மேல் வைத்த உந்தன் தயவை அழிக்க முடியுமா
ஒரு நாளும் அழியாத
என் நெஞ்சில் கரைந்தோடும்
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
Details
- Numeric ID
- 5331
- Song ID
- oru-manithanalum-song-lyrics-chords-ppt-giftson-durai-new-songs
- Views
- 1
- Downloads
- 1