Lyrics
ஒரு வாசல் எனக்காய் திறந்திருக்கும்
அதை பூட்டவே யாருமில்லை
என் கிரியைகளை என் தேவன் அறிவார்
துதி கீதம் பாடிடுவேன்
அல்லேலூயா பாடுவேன்
அவர் நாமத்தைப் போற்றுவேன்
மீட்பரை தேடுவேன்
அன்பர் என் இயேசுவே
1. கொஞ்ச பெலன் இருந்தும் - பஞ்சம்
பசி வந்தாலும் நாமத்தை மறுதலியேன்
அவர் நாமத்தைக் குறித்து கூறிட எனக்கு
பெலன் தாரும் இயேசையனே - புது
2. உயிருள்ளவன் என்ற பெயர் எனக்கிருந்தும்
செத்தவன் போல தூங்க மாட்டேன்
இனி விழித்துக்கொண்டுடெழுவேன்
விளைந்த நிலம் காண்பேன்
அறுப்புக்கு நானே செல்லுவேன்
பயிர் சாகும் முன்னே அரிக்கட்டுவேன்
3. ஜெயங்கொள்வான் எவனோ - அவனே
என் தேவனின் ஆலய தூணாகுவான்
ஒரு கல்லும் அதனின்று
நீங்குவதில்லையாம்
கிரீடம் தரிக்கப் பெறுவான்
வெள்ளை வஸ்திரம் தரித்து நடப்பான்
Details
- Numeric ID
- 1114
- Song ID
- oru-vasal-enakai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0