Lyrics
சாத்தியக்கூறை ஆராய்ந்திடாமல்
நித்திய தரிசனம் தருபவரே
பிரயோஜனமில்லா எவரையும் அழைத்து
உயர்த்திடும் ஆற்றலை உடையவரே
ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்
ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே
ஆயிரமாக்கி மகிழ்பவரே
சொன்னதை பிசகாமல் செய்பவரே
YAHWEH வைராக்கியம் உடையவரே
பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும்
போனதைத் திரும்பிடச் செய்தவரே
லோத்து என்னை பிரிந்து சென்றாலும்
திசைகளை எனக்காகத் திறப்பவரே
பாதைகள் தெரியாத நாட்களிலே
வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே
சொன்னது எல்லாம் ஒருகாலம் வந்தாலும்
சொன்னவர் ஒருகாலமும் விலகவில்லை
தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை
கானானை சேர்ந்ததும் தெரிந்துகொண்டேன்
சுமந்தவர் மேலான கானான் என்று
Details
- Numeric ID
- 453
- Song ID
- oruvanaai-irukkayil-azhaithavarae
- Views
- 1
- Downloads
- 1