PAARKAMUNAM VARUVAN பாவ சஞ்சலத்தை நீக்க
பாவ சஞ்சலத்தை நீக்க
Lyrics
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.
2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,தீய குணம் மாற்றுவார்.
3. பெலவீனமான போதும் கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.
Details
- Numeric ID
- 7152
- Song ID
- paarkamunam-varuvan-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0