Paava Irulil Thadumaari AlainthaenLyrics Song பாவ இருளில் தடுமாறி அலைந்தேன்
பாவ இருளில் தடுமாறி அலைந்தேன்
Unknown
Lyrics
Lyrics
பாவ இருளில் தடுமாறி
அலைந்தேன் நான்
ஜீவ ஒளியை காட்டி என்னை மீட்டாரே
உம் கண்களில் கண்ணீரை
கண்டேன் என் இயேசுவே – 2
1. மரண இருளின் பாதையிலே
பாவி நானும் நடந்து சென்றேன்
இரக்கம் காட்டி அழைத்தவரே
இரத்தம் சிந்தி மீட்டவரே
உம் கரத்திலே காயங்கள்
கண்டேன் என் இயேசுவே – 2
2. ஆபத்து காலத்தில் தூக்கியென்னை
ஆறுதல் தந்த அன்பின் தெய்வமே
கலங்கிடாதே என்றவரே
கரத்தை நீட்டி அணைத்தவரே
உம் விலாவிலே காயங்கள்
கண்டேன் என் இயேசுவே – 2
3. ஆறுகளை நான் கடந்து சென்றேன்
அவைகள் என் மேல் புரளவில்லை
அக்கினி ஜீவாலை எந்தனின் மேல்
அவியாமல் நீர் பாதுகாத்தீர்
உம் கால்களில் காயங்கள்
கண்டேன் என் இயேசுவே – 2
Details
- Numeric ID
- 3952
- Song ID
- paava-irulil-thadumaari-alainthaenlyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0