Lyrics
பேரின்பம் என்னிலே நீர்தாமே
நாதா உம் அருள் தாருமே
கார்மேகம் சூழ்ந்திடும் போதெல்லாம்
உம் பேராற்றல் எனைத் தாங்குமே
ஆ...
நான் தரும் பண் எல்லாம் என் திறன் என்றல்ல
உம்மால் நான் இசையாகிறேன்
நாள்தோறும் சோராமல் நாதனை நான் பாட
நீங்காத வரம் கேட்கிறேன்
மா பாவி என்னைப் போல யாருண்டு
பேரன்பர் உம்மைப் போல எவருண்டு
என்றும் உம்மை நான் பாட உந்தன் வரம் வேண்டும்
பேரிடி மின்னல் போல் தீவினை வந்தாலும்
போராடி நான் வெல்லுவேன்
சோதனை வந்தாலும் வேதனை என்றாலும்
சோராது முன் செல்லுவேன்
சீரான வாழ்வை என்றும் நான் தேட
நேரான பாதை ஒன்றை நான் நாட
என்னில் தெய்வ பேராற்றல்
தினம் தந்து தாங்கும்
Details
- Numeric ID
- 4393
- Song ID
- paerinbam-yennille-neerdhaamae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0