Lyrics
பகலிலும் காத்த நல் தேவா
இந்த இரவிலும் காத்திடும்
கனவிலும் உம்முடன் பேச
என் கர்த்தரே என்னோடிரும் -2
1. நாச மோச பாதைகளில்
நாளும் நான் நடந்தேனையா
துன்ப துக்க வேளைகளில்
துவண்டு தான் போனேனையா
உம் திரு இரத்தம் கொண்டென்னை
என் பாவம் போக்கினீரே -2
நாட்டிலும் வீட்டிலும்
ஜெயத்தின் வாழ்வைத் தாரும் -2
2. காலங்கள் தினம் மாறிடினும்
கிருபைகள் மாறாதையா
கண்ணின் மணிபோல் காத்திடும்
கருணையின் தேவா ஸ்தோத்திரம்
கலங்காதே என்றென்றும் என்னை
கனிவோடு சொன்னவரே
காலையும் மாலையும்
ஜெபிக்க பெலன் தாரும்
Details
- Numeric ID
- 1348
- Song ID
- pagalilum-kaatha-nal-deva-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0