Vaadai Kaattru வாடை காற்று வீசும் பனிக்காலம்
வாடை காற்று வீசும் பனிக்காலம்
Lyrics
வாடை காற்று வீசும் பனிக்காலம்
வானில் தூதர் பாடும் பண்தாளம்
பாரில் நம்மை மீட்க ஏழைக் கோளம்
பாலர்களை போன்றும் நல் ஞானம்
அண்ட சராசரத்தை படைத்த தேவனே
அகிலத்தையும் அரசாளும் வேந்தனே
பாவி என்னை மீட்க வந்த பரிசுத்தரே
பாரில் தாகம் தீக்க வந்த ஜீவ நதியே
வானில் நட்சத்திரம் மின்னியதே விந்தையாய்
வான சேனை கீதங்கள் பாடியே
அச்சமின்றி ஆட்டிடையர் விரைந்தோடியே
அதிசய பாலகனை பணிந்தனரே
பாடும் மயில்களும் பாடும் குயில்களும்
அருவிகளும் இன்னிசை மீட்டுதே
பனித்துளி பூக்களாக முன்னணை மீது
தென்றலோடு சேர்ந்து வந்து தாலாட்டுதே
Details
- Numeric ID
- 5424
- Song ID
- pamalai-03-vaadai-kaattru-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0