Karthevey Yuhayuhamai 253 Pamalai Song Lyrics
Pamalai Song Lyrics
Lyrics
கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.
உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.
பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.
ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே
சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப் போல் அவர்
உதிர்ந்து போகிறார்.
Details
- Numeric ID
- 5444
- Song ID
- pamalai-253-karthevey-yuhayuhamai-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0