Yesu Naadha Kaakireer 316 Pamalai Song Lyrics
Pamalai Song Lyrics
Lyrics
1. இயேசு நாதா! காக்கிறீர்,
இளைப்பாறச் செய்கிறீர்;
மோசம் நேரிடாமலும்,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர்,
நேச நாதா! காக்கிறீர்.
2. வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில்
சூறைக் காற்று மோதினும்
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர்;
நேச நாதா காக்கிறீர்.
3. சற்றுத் தூரம் செல்லவே,
மோட்ச கரை தோன்றுமே!
துன்பம் நீங்கி வாழுவேன்;
இன்பம் பெற்று போற்றுவேன்;
அதுமட்டும் தாங்குவீர்;
நேச நாதா! காக்கிறீர்.
Details
- Numeric ID
- 5432
- Song ID
- pamalai-316-yesu-naadha-kaakireer-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0