Anbe Vidaamal Serthu Kondir 359 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர், பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும். 2. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும்; கார் மேகத்திலும் வான ஜோதி! ‘விடியுங்காலை களிப்பாம்!’ உம் வாக்கு மெய் மெய்யே. 3. குருசே! என் வீரம் திடன் நீயே; உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்; வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்; விண் மேனியாய் நித்திய ஜீவன் வளர்ந்து செழிக்கும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5440
Song ID
pamalai-359-anbe-vidaamal-serthuk-kondir-song-lyrics
Views
0
Downloads
0