Panipani Thuli Pol Pozhigirathe Song பனித்துளி போல் பொழிகிறதே
பனித்துளி போல் பொழிகிறதே
Lyrics
பனித்துளி போல் பொழிகிறதே
தேவனின் அபிஷேகம் பின்மாரியின்
மழை பொழியும் காலம் வந்ததே
ஒருமனதோடு சபையாரெல்லாம்
ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே வேளை வந்ததே
தலை குனிந்து வாழ்ந்தது போதும்
தலையை உயர்த்திடு
சிங்கத்தை போல கெர்ச்சித்து
எதிரியை துரத்திடு
எங்கும் தேவனை தொழுது
கொள்ளும் காலம் வந்ததே
எழுப்புதலடைந்து இயேசுவின்
நாமத்தை எங்கும் உயர்த்துவோம்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
கோலியாத்தின் சத்தம் கேட்டு
பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை
நீ மறந்து போகாதே
விசுவாசமென்னும் கேடகத்தாலே
ஜெயத்தை பெற்றிடு
சத்துருவை உன் காலின் கீழே
மிதித்து எறிந்திடு
உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
நமக்கு தந்தாரே
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்லுவோம்
சத்துரு மேலே கொடியை ஏற்றி
தேசத்தை சுதந்தரிப்போம்
Details
- Numeric ID
- 7332
- Song ID
- panipani-thuli-pol-pozhigirathe
- Views
- 1
- Downloads
- 1