Lyrics
பரலோக வாசனே பூலோக நேசனே மனுக்கோலம் கொண்டவரே
பாரினில் வந்துமே தம்முயிர் தியாகமாய் தியாகமாய் தந்தவரே
பரிசுத்த வாழ்வதை பரலோகில் பெற்றிட பரனே நீர் வந்திட்டீரே
பாவி எம் வாழ்வதை பாசமாய் மாற்றியே பரதீசில் சேர்த்திட்டீரே
கெத்சமெனேயிலே சீஷர்கள் உறங்கவே விழித்திருங்கள் என்றவரே
கல்லெறி தூரத்தில் கல்லொன்றின் மீதிலே கதறியே ஜெபித்தவரே
கயவர்கள் மத்தியில் காயத்தை மாற்றவே கனிவோடு இரங்கினீரே
துரோகியாய் மாறின சீஷனைப் பாசமாய் சிநேகிதா என்றவரே
ராஜாக்கள் நடுவிலே ராஜாதி ராஜன் நீர் நீசனாய் மாறினீரே
கல்வாரி மலையிலே கள்ளர்கள் நடுவிலே கர்த்தா நீர் தொங்கினீரே
பகைவர்க்கும் அருள் செய்யும் பரனே உம் பாசத்தை சிலுவையில் காண்பித்தீரே
தந்தையின் கைகளில் ஜீவனைத் தந்து நீர் பரகதி சேர்ந்திட்டீரே
வானங்கள் அதிரவே சேவகர் நடுங்கவே வல்லமையாய் எழுந்திட்டீரே
சீஷர்கள் மத்தியில் காட்சியை தந்துமே தேற்றியே தாங்கினீரே
மாட்சியாய் மேகத்தில் தூதர்கள் சூழவே பரத்துக்கு ஏகினீரே
மாட்சி நகர் லோகத்தில் எம்மையும் சேர்க்கவே ராஜனாய் வருவீரே
பரலோக வாசனே பூலோக நேசனே மனுக்கோலம் கொண்டவரே
பார் போற்றும் வேந்தனே பாவியின் நேசனே பார் மீட்க வந்தவரே
Details
- Numeric ID
- 7017
- Song ID
- paraloga-vaasane-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open