Lyrics
பயப்படாதே பாரிலிப்போதே
திகையாதே கலங்காதே
தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன்
1.தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும் போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே
2.அக்கினியில் நீ நடக்கும் போது
அஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய்
அக்கினி ஜீவாலை உன்னைப்பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது !
3.இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகராம் தேவனும் நானே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே
4. உன்னை நானே உருவாக்கினேனே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
கண்மூடாமலும் காத்திடுவேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே
5.முந்தினதை நினைக்க வேண்டாம்
பூர்வமானத்தை சிந்திக்க வேண்டாம்
எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே
6. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
என்றும் ஜெபத்தையும் தவறவிடாதே
கடந்த தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும் வழிகளையும் விடாதே – பயப்படாதே
7.அல்லேலூ யாவுக் கருகனே
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்பா ஒமெகா நான் தானே
வல்ல கரத்தால் நடத்துவேனே!
Details
- Numeric ID
- 4020
- Song ID
- payappadaathey-paarilippothey-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0