Lyrics
1 பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு
ராவின் கோர கனாவால்
மாய்ந்த பாவி மரியாளை
மீட்பர் மீட்டார் அன்பினால்.
மாதை மீட்ட நாதா, எம்மின்
பாவம் கோஷ்டம் நீக்கியே,
தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்
ஞான ஜோதி தாருமே
2 தூய்மையான மரியாளே
நாதர் பாதம் நீங்காது,
வாய்மையோடு சேவை ஆற்றி
சென்றால் எங்கும் ஓயாது.
நாதா , நாங்கள் தாழ்மையோடு ம்
ஊ க் கத்தோடும் மகிழ்வாய்
யாதும் சேவை செய்ய உந்தன்
ஆவி தாரும் தயவாய்
3 மீட்பர் சிலுவையில் தொங்கி
ஜீவன் விடக் கண்டனள்;
மீண்ட நாதர் பாதம் வீழ்ந்து
யார்க்கும் முன்னர் கண்டனள்
நாதா, வாழ்வின் இன்பம் நண்பா
அற்றே நாங்கள் சோர்கையில்
பாதம் சேர்த்து ஈறில்லாத
இன்பம் தாரும் நெஞ்சினில்
Details
- Numeric ID
- 5452
- Song ID
- peyin-koshtam
- Views
- 0
- Downloads
- 0