Pirandha Palanai Nee Arindhida பிறந்த பலனை நீ அறிந்திட

பிறந்த பலனை நீ அறிந்திட
Unknown
Lyrics

Lyrics

பிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால் இறைவன் இயேசுவை தெரிந்துக்கொள்வாய் சிறந்த வாழ்வை நீ காண வேண்டுமென்றால் சிலுவையில் தொங்கிடும் இயேசுவை பார் – பிறந்த நிரந்திரமில்லாத உலகத்தில் மன நிம்மதி காண ஒரு வழியுண்டு அது நானே வழியும் சத்தியமும் ஜீவனும் உரைத்திட்ட இயேசுவின் பதிலுண்டு உலகம் முழுவதும் நீ ஆதாயம் ஆக்கிக் கொண்டாலும் பயமென்ன விலைமதிப்பில்லா உன் ஆத்துமா அழிந்தால் உனக்கு உண்டாகும் இலாபமென்ன பல கலைகள் கற்று பெரும் புகழும் பெற்று பணத்தில் மிதந்தாலும் பலனென்ன அழிந்துடும் உலகில் அழியா மீட்பரை அறியாது வேறு வழியென்ன – பிறந்த பக்தர்கள், முக்தர்கள், சித்தர்கள் அனைவரும் நித்திரை அடைந்தார் உலகறியும் இத்தரையில் பரிசுத்தராம் இயேசு மரித்துயிர் எழுந்தார் நாம் அறிவோம் சத்தியம் அறியா மாந்தர்கள் வாழும் இச்ஜகத்தினில் எங்கும் சென்றிடுவோம் நித்திய ஜீவன் அளித்திடும் இயேசு இரட்சகர் நற்செய்தி உரைத்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
399
Song ID
pirandha-palanai-nee-arindhida-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0