Lyrics
பொல்லாத மனுஷன் புரிஞ்சு
கொள்ளவில்லையே – நம்
நல்லாயன் இயேசுவை
அறிஞ்சு கொள்ளவில்லையே இதை
1. காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
மலராய் வாழ்கிறான் தினம்
பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
பூவாய் வாழ்கிறான்
ஜீவனும் மரணமும் வாழ்வும்
தாழ்வும் தேவனின் கையிலே
எது நடந்தாலும் செய்வோம் நாமும்
தேவனின் சித்தமே
2. மனம் போன போக்கில் தினமொரு
திசையில் அலைந்து திரிகிறான்
பணம் பத்தும் செய்யும் என்று
பகுடி பேரி ஆணவப்படுகிறான்
செல்வம் கல்வி ஞானம் உயர்வு
தேவனின் கையிலே
உயர்த்தும் தேவனின்
கையினில் அடங்கினால்
உயர்வு நிச்சயமே
Details
- Numeric ID
- 241
- Song ID
- pollatha-manusan-purichi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0