PORPU MIGUM KEERTHANAI பொற்பு மிகும் வானுலகும்
பொற்பு மிகும் வானுலகும்
Lyrics
சீயோன் 1 பொற்பு மிகும் வானுலகும்
பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே
பொந்திப்பிலாத் தரண்மனையில்
வந்து நிற்கும் காரணமேன், கோவே?
கிறிஸ்து கற்பனை மீறிய பாவத்தால்
கடின நரகாக்கினைப் படாமல்-உன்னைக்
காப்பதற் கிங்கே ஞாய
தீர்ப்பில் உற்றோம், சீயோனின் மாதே.
சீயோன் 2 துய்ய திரு மேனி எல்லாம்
நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்
சோரி சிந்த, வாரதினால்
நீர் அடிக்கப்பட்டதென்ன, கோவே?
கிறிஸ்து வையகத்தின் பாதகத்தால்
பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற,-இந்த
வாதை எல்லாம் பட்டிறக்க,
போத மனம் சம்மதித்தோம், மாதே.
சீயோன் 3 செய்ய கண்கள் உறச் சிவந்து,
திருக் கன்னங்கள் தடித்து, மிக வீங்கி,-முழுச்
சென்னியின் ரோமங்கள் எல்லாம்
வின்னமுற்றிங் கிருப்பதென்ன, கோவே?
கிறிஸ்து மையிருளில் குருக்களுடை
மாளிகையில் படுத்தின பாடெல்லாம்-இங்கே
வன் கொலைஞரால் அடிக்க,
பங்கமுற்ற கோலம் இது, மாதே
Details
- Numeric ID
- 7147
- Song ID
- porpu-migum-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0