Pottri Thuthi Pugalnthu Thuthi போற்றித் துதி புகழ்ந்து துதி
போற்றித் துதி புகழ்ந்து துதி
Unknown
Lyrics
Lyrics
போற்றித் துதி புகழ்ந்து துதி உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி
தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார்
தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் நாம்
தீயில் அகப்படாமல் தூக்க வந்தார்
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார்
பொல்லாத உலகத்தின் மாய்கையாலே சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே
மேலான இரட்சிப்பை கூறுகின்ற இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ
வாராயோ பாவி நீ கேளாயோ இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ
Details
- Numeric ID
- 806
- Song ID
- pottri-thuthi-pugalnthu-thuthi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0