Lyrics
போற்றித் துதிப்போமே – இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே
போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்
1. சுவர்க்கத்தை விட்டவனை,
புவியினில் வந்து உதித்தவனை
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை
2. பெத்லேகில் உதித்த பெரும்
பாவிகளின் நேயனை கெத்சமனே
தனில் பாவிகளுக்காகக் கண்ணீர்
விட்டு ஜெபம் செய்தவனை நாம்
3. கல்வாரியின் அரசை எங்கள்
சபைத்தலையாம் இயேசையனை
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம்
4. பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க்
கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம்
Details
- Numeric ID
- 794
- Song ID
- pottri-thuthipomae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0