Lyrics
புது ராகம் பாடிடுங்கள் வாலிப விடியலிலே !
மனதின் கனவுகள் நிறைவேறும் விழிகளின் துணையுடனே...! (2)
ஒவ்வொரு செயலுக்கும் முடிவுண்டு இறைவனின் தீர்ப்பிலே
இதை இதயம் மறவாதிருந்தாலே இளமை மாயை அறிந்திடுமே...!
படைப்பினை ரசிக்கும் மனமே படைத்தவரை ஏன் மறந்தாய் ?
மாய உலகில் எல்லாம் அழகே மறையும் வயதை மறந்தாய் ஏனோ ?
ஆசையனைத்தும் ஒழிந்து போகும் நாளும் தூரமில்லை..!
இதை மண்தோன்றி மண்ணுக்கு போகின்ற மனிதன் அறிவதில்லை (2)
செயலுக்கு ஏற்ற பலனுடனே இறைமகன் தீர்ப்பினை தருவாரே...!
மந்தையை இரண்டாய் பிரித்திடவே, ராஜாதி ராஜன் மீண்டும் வருவார்...!
அவர் சொல் கேட்கும் செம்மறியென்றும், துயரம் அடைவதில்லை..!
உன் வாலிப நாட்களில் தேவனை நினைத்தால் இரண்டாம் மரணமில்லை (2)
Details
- Numeric ID
- 1456
- Song ID
- pudhu-raagam-padidungal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0