Lyrics
புது வாழ்வு தந்தீரே
பாவி என்னை மீட்டு கொண்டீர்
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உந்தன் அன்பு பெரியதே
மலைபோல துன்பம் சூழ்ந்தாலும்
பனி போல உருக செய்தீர்
நெரிந்த நாணலை போல் வாழ்ந்தேன்
தீப்பிளம்பாய் மாற்றி விட்டீர்
சோகங்களால் வாடும் போது
தாயாக ஆற்றி தேற்றினிர்
தனிமையில் வாடும் எனக்கு
உம் பிரசன்னம் ஆனந்தம் ஆனந்தம்
வாழ் நாளெல்லாம் பற்றிக்கொள்வேன்
உந்தன் அன்பை நான் பிரஸ்தாபிப்பேன்
அர்ப்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கே
நீர் என் முன் செல்லும் போதெல்லாம்
தோல்விகள் எனக்கில்லையே
உம் கரம் தாங்கி கொள்வதால்
வெற்றியை பற்றி கொள்வேன்
மலைகளை தாண்டிடுவேன்
பள்ளங்களை நான் கடப்பேன்
சிறைச்சாலை கதவுகள்
என் துதியினால் உடையுமே
Details
- Numeric ID
- 4837
- Song ID
- pudhu-vazhvu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0