Lyrics
புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
பரலோகம் இறங்கிடுமே
சந்தோஷத்தோடு கர்த்தருக்காய் பாடு
கவலைகள் நீங்கிடுமே!'
1. பெயர் சொல்லி அழைத்தார்
கரத்தினால் அணைத்தார்
அக்னியின் ஜுவாலை அழிக்காது காத்தார்
தண்ணீரைக் கடந்தாலும்
என்னைத் தூக்கினார்
கண்ணீரில் நனைந்தாலும்
என்னைத் தாங்கினார்
2. காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை
நெரிந்த என் வாழ்வு முறிவதுமில்லை
அவர் நாம மகிமைக்காக உயர்த்திடுவார்
களிமண் நான் அவர் நாமம் உயர்த்திடுவேன்
3. நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும்.
அக்கிரமம் நீக்கி பசும் பொன்னாய் மாறும்
புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார்
கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார்
Details
- Numeric ID
- 1138
- Song ID
- puthu-paatu-paadu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0