Lyrics
புது பாடல் பாடிடுவேன்
என் நேசர் தந்ததால்
அனுதினமும் அவரில் நான்
புது ஜீவன் பெற்றிடுவேன்
1. புது வாழ்வு மலர்ந்ததால்
எந்தன் பாவம் மறைந்ததே
இயேசு ஜீவ தேவனே
எந்தன் பாதையின் வெளிச்சமே
2. அதிகாலை நேரமே
புது கிருபையின் உதயமே
எந்தன் இதய தாகமே
உந்தன் கிருபையால் நிறையுமே.
3. புதுவானம் பூமியும்
உந்தன் கரத்தின் மேன்மையே
இந்த உலகம் அழியுமே
உந்தன் வார்த்தை நிலைநிற்குமே
Details
- Numeric ID
- 877
- Song ID
- puthu-padal-paadiduven-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0