Puthumai Devakumaran Song Lyrics புதுமை தேவகுமாரன்
புதுமை தேவகுமாரன்
Lyrics
புதுமை தேவகுமாரன்
பிறந்தார் பெத்லகேம் பாலன
புல்லணை மீது தவழ்ந்தாரே
தூதர் நற்செய்தி சாற்றிடவே
தேடிச் சென்றனரே ஓர் கூட்டம்
காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
கண்ட காட்சியிதே
ஆயர் குடியில் அன்புருவம்
ஆண்டவர் பிறந்தார் மாவிந்தை
வான சாஸ்திரிகளும் பணிந்தே
வணங்கும் தாழ்மையிதே
மாந்தர்கள் அன்று காரிருளில்
மாபெரும் வெளிச்சம் கண்டார்கள்
மங்கிடா மனஜோதி இயேசு
மகிமை சாட்சியிதே
பண்புமிகும் இப்பாலகனே
பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ
தம்மைப் பின்பற்றியே நடப்போர்
துதிக்கும் கானமிதே
தேவ பிதாவைத் சேர்வதற்கே
ஜீவ மார்க்கம் இவர் கிறிஸ்து
முன்னணை முதல் கொல்கதாவே
துன்பப் பாதையிலே
விண் விடிவெள்ளி பாலகனே
மண்ணுலகினிலே உதித்தார்
மீண்டும் மின்னலைப் போல் வருவார்
மன்னன் வாக்குமிதே
Details
- Numeric ID
- 5410
- Song ID
- puthumai-devakumaran-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0