Pamalai 326 Iratcha Perumanae Paarum Song Lyrics இரட்சா பெருமானே பாரும்
இரட்சா பெருமானே பாரும்
Lyrics
1 ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்;
தேடி வந்து நிற்கிறோம்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்.
2 மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.
3 நீதி பாதை தவறால்
நேயமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா
ஒருபோதும் கைவிடீர்.
4 ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்,
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
ஊழியகாலம் வாழ்விப்பீர்.
Details
- Numeric ID
- 5472
- Song ID
- ratcha-peyrumaaney-paamaalaihal
- Views
- 0
- Downloads
- 0