Pamalai 326 Iratcha Perumanae Paarum Song Lyrics இரட்சா பெருமானே பாரும்

இரட்சா பெருமானே பாரும்

Lyrics

1 ரட்சா பெருமானே, பாரும், புண்ணிய பாதம் அண்டினோம் சுத்தமாக்கி சீரைத் தாரும்; தேடி வந்து நிற்கிறோம்; இயேசு நாதா, இயேசு நாதா உந்தன் சொந்தமாயினோம். 2 மேய்ப்பன் போல முந்திச் சென்றும் பாதுகாத்தும் வருவீர்; ஜீவ தண்ணீரண்டை என்றும் இளைப்பாறச் செய்குவீர்; இயேசு நாதா, இயேசு நாதா மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர். 3 நீதி பாதை தவறால் நேயமாய் நடத்துவீர்; மோசம் பயமுமில்லாமல் தங்கச் செய்து தாங்குவீர், இயேசு நாதா, இயேசு நாதா ஒருபோதும் கைவிடீர். 4 ஜீவ கால பரியந்தம் மேய்த்தும் காத்தும் வருவீர், பின்பு மோட்ச பேரானந்தம் தந்து வாழச் செய்குவீர்; இயேசு நாதா, இயேசு நாதா ஊழியகாலம் வாழ்விப்பீர்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5472
Song ID
ratcha-peyrumaaney-paamaalaihal
Views
0
Downloads
0