Lyrics
மனம் தளர்ந்த வேளையில் மருந்தாக வந்தவர்
கலங்கின நேரத்தில் கண்ணீரை துடைப்பவர்
வெயிலுக்கு நிழலாக பாதைக்கு ஒளியாக
இரட்சகர் வந்தாரே இரட்சிப்பு தந்தாரே
1.தோல்வியின் நேரத்தில் ஜெயமாக வந்தாரே
பெலவீன நேரத்தில் பெலனாக வந்தாரே
சுகவீன நேரத்தில் சுகம் என்றும் தந்தாரே
துன்பத்தின் நேரம் என் துணை நின்றாரே
2.தனிமையின் நேரத்தில் துணையாக வந்தாரே
சோர்வுற்ற நேரத்தில் பெலனாக வந்தாரே
நிந்தனை நேரத்தில் நிஜமாக நின்றாரே
கண்ணீரின் நேரம் என் கரம் பிடித்தாரே
Details
- Numeric ID
- 2232
- Song ID
- ratchagar-vanthare-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1