Lyrics
யார் என்னை குற்றபடுத்தினாலும்
ஐயரே , நீர் என்னை விட்டு கொடுக்கவில்லை
நானே என்னை விரும்பாத போதும்,
ஐயரே, உம் அன்பு என் மேல் குறையவில்லை
உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேறெதுவும் வேண்டாம்
உதாசீனமாய் என்னை உதறித் தள்ளின போதும்,
நீர் என்னை சேர்த்துக் கொண்டீர்
பலரால் நான் உடைக்கப்பட்டேன்
ஆனால் பரன் என்னை உருவாக்கினீர்
பலவீனம் என் பெயர் ஆனது
ஆனால், நீர் எந்தன் பலமானீர்
எனக்கு சான்றிதழ்கள் இல்லை,
என்னிடம் சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதுமே
என் கரைகள் அநேகம் உண்டு
ஐயரே, கரை நீக்க காயப்பட்டீர்
என் மீறுதல்கள் கணக்கே இல்லை
ஆனால் கணக்கில்லா கிருபை தந்தீர்
தாளந்தும் இல்லை, தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே -என்னிடம்
Details
- Numeric ID
- 562
- Song ID
- sagayarae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1