Lyrics
சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றேன்
ஆடலையும் பாடலையும் எனக்கு தந்தீரே
ஆனந்த மழையில் நனைகின்றேன்
கவலை எல்லாம் மறந்துவிட்டேன் உந்தன் பாதத்தில் -2
(1)
தாவீதை போல மகிழ்ந்திருப்பேன்
சங்கீத கீர்த்தனம் பாடி ஆடிடுவேன் -2
வெட்கங்கள் நீக்கி துதித்திடுவேன்
கெம்பீர சத்தமாய் ஆராதிப்பேன் -2
ஆராதனை ஆராதனை இயேசுவின் பாதத்தில் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் பாதத்தில் அல்லேலூயா
(2)
ஆராதனை அழகில் என்னை மறப்பேன்
மகிழ்ச்சியின் மதகுகள் திறக்கின்றது -2
அக்கினி அபிஷேகம் அனல் மூட்டுது
ஆவியின் வரங்கள் என்னை நிரப்புது -2
அபிஷேகமே அபிஷேகமே இயேசுவின் பாதத்தில் அபிஷேகமே
ஆவியில் நான் நிரம்பிடுவேன் இயேசுவின் பாதத்தில் நிரம்பிடுவேன்
(3)
துக்கத்தில் இனிமேல் துவழ்வதில்லை
வேதனை இனிமேல் வருவதில்லை -2
வியாதியில் இனிமேல் வாழ்வதில்லை
வெட்கத்தில் இனிமேல் நடப்பதில்லை -2
துக்கமில்ல துயரமில்ல இயேசுவின் பாதத்தில் நிம்மதிதான்
கண்ணீர் இல்ல கவலையில்ல இயேசுவின் பாதத்தில் ஆறுதல்தானே
Details
- Numeric ID
- 1491
- Song ID
- santhosha-velzhathil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0