Saruvaesuvara சருவேசுரா ஏழைப்ப…
சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே
Lyrics
சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி
திரியேக பரதேவா
நெறி மேவும் ஒரு யோவா
சித்தம் இரங்கிக் காத்துக்
கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து
தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக்
கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய்
நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை
தொகுத்தெனக் குபதேசித்தாய்
இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும்
எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்
தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும்
தண்டியாமல் பொறுத்தீர்
நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென்
நன்றி கேட்டை மறுத்தீர்
ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்
நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல்
நீதி வழியைக் கடந்தேன் கெட்ட
வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின்
மனதுக்கேற்க நடந்தேன்
பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்
தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்
Details
- Numeric ID
- 6720
- Song ID
- saruvaesuvara-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0