Sathai Nishkalamai சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
Lyrics
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்
சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்
அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்
பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்
அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்
நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்
ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை
ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவதே
செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மம தாய்
எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பா தேவெளியாநடுநாளெனைத் தாங்கிக்கொள்ள
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
Details
- Numeric ID
- 6353
- Song ID
- sathai-nishkalamai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open