Lyrics
சத்தியமும் கிருபையுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு ஜீவன் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேலை வந்திறங்கிடும்
வானந்திறந்தருளும் பல - தனங்களை இந்நேரமிதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்
என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனே உம் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடமாற் கண்மணி காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே
சுயமாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையின் ஆவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதை பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே
அதிக அதிக அளவில் அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மை போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமய முன்னத பெலன் ஈந்திடும்
Details
- Numeric ID
- 2699
- Song ID
- sathiyamum-kirupaiyumayu-nithamumae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0