Seeyone Nee Vizhithezhumbiduvaai சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய்
சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய்
Lyrics
1. சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய்
சாலேமின் ராஜன் இதோ வருவதால்
சீல குணமுள்ள அன்பின் தயாளன்
ஆகாயம் மேலே எழுந்திதோ வாரார்
2. பூ மண்டலங்கள் கிடு நடுங்கிடுதே
வான மண்டலங்களும் நடுங்கிடுதே
பாசமில்லாத உம் மானிடர் பூவில்
பயந்தங்கும் இங்கும் ஓடுவதாலே
3. மாய உலகத்தை வெறுத்துவிட்டால் நீ
மாட்சிமை தங்கும் நகர் சேரலாமே
மகிமையின் சாயல் அணிந்தவராய் நாம்
மணவாளனோடு ஏகிடுவோமே
4. பலவித துன்பங்கள் நிறைந்துமே வருதே
காரிருள் நாட்களும் நெருங்கிடுதே
அந்தகார பிரபு வெளியாகும் முன்னே
சந்தோஷ ராஜ்யத்தில் சேர்ந்திடலாம் நாம்
5. திருச்சபையே உன் தீபங்கள் எல்லாம்
சூர்ய ப்ரபையாய் திலங்கட்டுமே
மகிமையின் ரதத்துடன் உதித்திடும் போது
மணவாளனோடு நாம் மறுரூபமாவோம்
Details
- Numeric ID
- 4702
- Song ID
- seeyone-nee-vizhithezhumbiduvaai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open