Lyrics
சீயோனில் நான் செழித்திருப்பேன்
சிறந்து வாழ்ந்திருப்பேன்-என்றும் -2
1. புதிய நாமத்தில் என்னை அழைப்பார்
கர்த்தரின் மாறாத உரிமையை பெறுவேன்
வல்லமை குறைவதில்லை
இயேசு எனது இன்பதுணையே
அல்லேலூயா அல்லேலூயா (4)
2.கர்த்தரின் கையில் கீரிடமாவேன்
தேவ கரத்தில் மேன்மையைப் பெறுவேன்
கைவிடப் படுவதில்லை
இயேசு எனது நீங்காத துணையே
3.தேவனின் அன்பில் மூழ்கி குளிப்பேன்
நித்திய மகிழ்ச்சி என்னில் பெறுவேன்
வறுமை வருவதில்லை
இயேசு எனது ஜீவ துணையே
4. ஜீவ ஆவியில் என்னை நிறைப்பார்
தெளிந்த ஞானம் என்னில் பெறுவேன்
அன்பு குறைவதில்லை
இயேசு எனது நேச துணையே
Details
- Numeric ID
- 1487
- Song ID
- seeyonil-naan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0