Lyrics
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடுவோம் புறப்படு
புறப்படு புறப்படு
தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
பாதாளம் சென்றிடும்
பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
பட்டணங்கள் கிராமங்களில்
கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா
உலக இன்பம் போதுமென்று
பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக
வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
அறியாயோ மகனே (மகளே)
பயிர்கள் முற்றி அறுவடைக்கு
தயாராக உள்ளது தெரியாதா மகனே (மகளே)
இயேசு நாமம் அறியாத எத்தனையோ
கோடிகள் இந்தியாவிலே
இன்னும் சும்மா இருப்பது நியாயம்
இல்லையே தம்பி இன்றே புறப்படு
வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
இதயங்கள் லட்சங்கள் உண்டு
உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
வாழ்பவர்கள் கோடிகள் உண்டு
Details
- Numeric ID
- 2451
- Song ID
- senaikalaai-ezhumbiduvom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0