Setril Naan Irunthaen சேற்றில் நான் இருந்தேன்
சேற்றில் நான் இருந்தேன்
Lyrics
சேற்றில் நான் இருந்தேன்
கன்மலை மேல் நிறுத்தி
கால்களை ஸ்திரப்படுத்தினீர்
கூட்டுக்குள் இருந்தேன்
கலைத்து எறிந்து
உயரே பறக்க செய்தீர்
பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்
ஆவியில் மிதக்க வைத்தீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2
1. மண்தரையில் நடந்திட நேரம்
மன்னா கொண்டு போஷித்தீரே
காட்டில் நான் அலைந்திட்ட நேரம்
என்னை காகம் கொண்டு போஷித்தீரே
தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டு
தீமைக்கு விலக்கிவிட்டீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2
2. உம் வார்த்தையின் வல்லமையினால்
என் காலங்களை பார்க்க செய்தீர்
உம் கிருபையின் மேன்மையினால்
என் சிந்தை எல்லாம் மாற செய்தீர்
பரிசுத்த ஆவியின் வல்லமை தந்து
வானங்களில் பறக்க செய்தீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2
Details
- Numeric ID
- 1836
- Song ID
- setril-naan-irunthaen-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1