Lyrics
சிலுவை மரமே நீ சொல்
தேவன் உடல் எங்கே
உலவும் காற்றே நீ சொல்
இயேசுவின் குரல் எங்கே
தாய் போல் எம்மை சேர்த்து
தழுவும் கரம் எங்கே
கிளையை பிரிந்து பூவாய்
உதிர்ந்தோம் நாம் இங்கே
காற்றே எங்கள் சோகம்
சொல்வாய் நீ அங்கே
எங்கள் பாரம் வாங்க
இங்கே ஆளில்லை
சோகம் சொல்லி தாங்க
இங்கே தோள் இல்லை
எங்கள் பாவம் தாங்க
உம்போல் தாயில்லை
உம்மை நாங்கள் தேவா
சொல்லவும் வாயில்லை
உம்மை பிரிந்த பின்னால்
இங்கே வாழ்வில்லை
பாலைவனத்தில் மீனாய்
நாங்கள் காய்கின்றோம்
மேய்ப்பன் இல்லை நாங்கள்
முல்லை மேய்கின்றோம்
நாளை பொழுதை எண்ணி
நாளை கழிக்கின்றோம்
தேவன் வருவார் என்றே
தேகம் சுமக்கின்றோம்
தாயாய் வருவார் என்றே தவங்கள் இருக்கின்றோம்
Details
- Numeric ID
- 3545
- Song ID
- siluvai-marame-nee-sol-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0