Lyrics
சுவிசேஷத்தைக் கேட்பீரே
சுதன் இயேசுவை ஏற்பீரே
1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே
சிலுவையைச் சுமந்தாரே
ஜீவனையும் ஈந்தாரே
2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே
அவராலே யன்றி நித்திய
ஜீவனில்லை என்றாரே
3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும்
வருவீரே என்னிடமே
தருவேன் இளைப்பாருதலே
4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே
உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல
இரட்சிப்பைப் பெறுவாய்
5. இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது
கவலையற்றிருப்போரே
தண்டனைக்குத் தப்புவீரோ?
Details
- Numeric ID
- 4420
- Song ID
- suvisheththai-keatpeere-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0