Thani Maanthan Desathaarum Song பாமாலை: 235 தனி மாந்தன் தேசத்தாரும்

தனி மாந்தன் தேசத்தாரும்

Lyrics

1. தனி மாந்தன் தேசத்தாரும், நீதிப் போரில் சேர்ந்துமே நன்மை நாட்ட தீமை ஓய்க்க ஓர் தருணம் நேருமே; ஸ்வாமி ஆட்சி, மேசியாவை ஏற்று அன்றேல் தள்ளியே தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து ஆயுள்காலம் ஓடுமே. 2. சத்திய நெறி மா கடினம் பயன் பேரும் அற்றதாம் சித்தி எய்தாதாயினுமே நீதியே மேலானதாம் நீதி வீரன் நீதி பற்ற கோழை நிற்பான் தூரமே நீதி பற்றார் யாரும் ஓர்நாள் நிற்பர் நீதி பற்றியே. 3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கி கர்த்தா, உம்மைப் பின்செல்வோம் கோர நோவு நிந்தை சாவு சிலுவையும் சகிப்போம் காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை புதிதாய் விளங்குமே மேலும் முன்னும் ஏறவேண்டும் சத்திய பாதை செல்வோரே. 4. தீமை கிரீடம் சூடி வாழ்ந்தும், சத்தியம் நிலைத்தோங்கிடும் வாய்மை வீரன் தூக்குமேடை தீ வாள்வாய்ப் படுகினும் வீரன் அவன், லோகம் ஆள்வான் நீதி வாழ்க்கை வெல்லுமே சாரும் பக்தனையே நாதர் காப்பார் காணா நின்றுமே. வீரன் அவன், லோகம் ஆள்வான் நீதி வாழ்க்கை வெல்லுமே சாரும் பக்தனையே நாதர் காப்பார் காணா நின்றுமே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5036
Song ID
thani-maanthan-desathaarum-song-chords-ppt
Views
0
Downloads
0