Lyrics
தனிமையான என்னை நினைத்த தேவனே
இனிமையான கரங்களால்
அணைத்த தேவனே-2
வாழ்ந்திடுவேன் உம் வார்த்தையினால்
வளர்ந்திடுவேன் உம் வலிமையினால்-2
1. பந்த பாசம் தந்த நேசம்
தூவும் பனியாய் யாவும் மாயை -2
நித்திய உந்தன் சத்திய அன்பு
எந்தன் வாழ்வில் போதும் என்றும் -2
2. வந்த காகம் தந்த உணவு
பஞ்சகாலத்து தஞ்சம் நீரே
நல்ல உந்தன் வல்ல ஆற்றல்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
3. இந்த பூமி அந்த வானம்
அழிந்து ஒருநாள் ஒழிந்து போகும்
தேவா உந்தன் ஜீவ வசனம்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
Details
- Numeric ID
- 1212
- Song ID
- thanimaiyaana-ennai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0