Lyrics
தனிமையில் நான் வாடும் போது
அன்பிற்காய் ஏங்கும் போது
என்னைத் தேடி வந்த ஒரு ஜீவன் நீரே-2
தகுதியில்லா என்னையும்
நீர் தகுதிப்படுத்தி மகிழ்கிறீர்
பாவியான என்னையும்
உம் பிள்ளை என்று அழைக்கிறீர்
வெறுத்தோரின் கண்கள் முன்னே
என்னை நீர் உயர்த்தி வைத்தீர்
புழுதிகளில் வாழ்ந்த என்னை
ராஜாக்களோடே அமர்த்தினீர்(2)
என்ன தவம் செய்தேனோ
என்னை நீர் கண்டிடவே-2
என்ன தவம் செய்தேனோ
என்னை நீர் நேசிக்கவே -2
முட்கள் நடுவே நடந்த பாதை
காரிருள் என்னை சூழும் வேளை
பயப்படாதே என்று சொல்லி
நடத்தி சென்றீரே-2
இயேசுவே (3)
உம் நாமம் உயர்ந்ததே (3)
உம் நாமம் உயர்ந்ததே (3)
Details
- Numeric ID
- 1210
- Song ID
- thanimaiyil-naan-vaadum-pothu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0