Lyrics
தண்ணீரை கடக்கும் போது - என்
தேவன் என்னோடிருப்பார்
அக்கினி ஜுவாலை என் பேரில்
பற்றாது பாதுகாத்து கொள்வார்
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
நீரே எந்தன் தேவனையா
என்னை மீட்டு கொண்டவரே
நீரே எந்தன் தஞ்சமையா
1) அக்கினியில் நான் நடந்தாலும்
அழிந்து நானும் போவதில்லை
ஆறுகளை நான் கடந்தாலும்
அவைகள் என்மேல் புரள்வதில்லை
2) உமக்கு முன்பே தேவனில்லை
உமக்கு பின்பும் இருப்பதில்லை
நீரே கர்த்தர் உம்மையல்லால்
வேறே இரட்சகர் இல்லையய்யா
3) முந்தினவைகளை நினைப்பதில்லை
பூர்வமானதை சிந்திப்பதில்லை
புதிய தரிசனம் தந்தெமக்கு
புதிய காரியம் செய்கின்றீர்
Details
- Numeric ID
- 3386
- Song ID
- thanneergal-kadakkum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0